1. செய்திகள்

வடகிழக்குப் பருவ மழை - வேளாண்மைப் பல்கலைக்கழக முன்னறிவிப்பு

KJ Staff
KJ Staff
வடகிழக்குப் பருவ மழை

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களும் எதிர்வரும் வடகிழக்குப் பருவ மழையின்போது சராசரி மழை அளவை எட்டும் என வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கால நிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. 

 தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் மற்றும் பயிர் மேலாண்மை இயக்ககம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள முன்னறிவிப்பின்படி தமிழகத்தில் அக்டோபர் முதல் டிசம்பர் வரையில் வடகிழக்குப் பருவமழை பெய்யும்.  இதற்காக ஆஸ்திரேலிய நாட்டில் இருந்து பெறப்பட்ட மழை மனிதன் எனும் கணினி கட்டமைப்பை (மென்பொருளை) பயன்படுத்தி காலநிலை ஆராய்ச்சி மையத்தில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. இந்த ஆய்வின்படி மாவட்டம் வாரியாக பெய்யக் கூடிய சராசரி மழை அளவு மற்றும் எதிர்பார்க்கப்படும் மழை அளவு (அடைப்புக் குறிக்குள்) குறித்த மண்டல வாரியான விவரங்கள் மற்றும் மண்டல வாரியான பயிர் வகைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

வடகிழக்கு மண்டலத்துக்கு உள்பட்ட சென்னை - 788 மி.மீட்டர் (767), கடலூர் 696 மி.மீ. (667), காஞ்சிபுரம் 640 மி.மீ. (657), திருவள்ளூர் 588 மி.மீ. (529), திருவண்ணாமலை 445 மி.மீ. (471), வேலூர் 348 மி.மீ. (343), விழுப்புரம் 498 மி.மீ. (466) போன்ற இடங்களில்  சராசரி மழை அளவு மற்றும் எதிர்பார்க்கப்படும் மழை அளவு கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்பகுதிகளில் நிலக்கடலை, கம்பு, மானாவாரி நெல், கொடி வகைக் காய்கறிகள், தர்ப்பூசணி பயிரிட  பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

வடமேற்கு மண்டலத்துக்கு உள்பட்ட தருமபுரி 329 மி.மீ. (338), கிருஷ்ணகிரி 289 மி.மீ. (300), நாமக்கல் 291 மி.மீ. (306), சேலம் 369 மி.மீ. (361) ஆகும். மேலும் இப்பகுதிகளில் மரவள்ளி, நிலக்கடலை, பயறு வகைகள், ஆமணக்கு, மானாவாரி தக்காளி, சோளம், மக்காச்சோளம், ராகி, கம்பு, வெண்டை, வெங்காயம் பயிரிட பரிந்துரைக்கப்பட்டுள்ளது .

மேற்கு மண்டலத்துக்கு உள்பட்ட கோவையில் 328 மி.மீ. (363), ஈரோடு 314 மி.மீ. (370), திருப்பூர் 314 மி.மீ. (281).  இப்பகுதிகளில் நிலக்கடலை, ஆமணக்கு, துவரை, சோளம், மக்காச்சோளம் பயிரிடலாம். 

காவிரி பாசன மண்டலத்துக்கு உள்பட்ட அரியலூர் 544 மி.மீ. (528), கரூர் 314 மி.மீ. (311), நாகப்பட்டினம் 937 மி.மீ. (924), பெரம்பலூர் 440 மி.மீ. (428), தஞ்சாவூர் 549 மி.மீ. (475), திருவாரூர் 717 மி.மீ. (642), திருச்சி 390 மி.மீ. (381). காவிரி டெல்டா பகுதிகளில் நெல், எள், கம்பு, சோளம், மக்காச்சோளம், சாமந்தி, சம்பங்கி, செவ்வந்தி பயிரிட பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட திண்டுக்கல் 435 மி.மீ. (439), மதுரை 418 மி.மீ. (420), புதுக்கோட்டை 404 மி.மீ. (385), ராமநாதபுரம் 490 மி.மீ. (459), சிவகங்கை 421 மி.மீ. (393), தேனி 357 மி.மீ. (323), திருநெல்வேலி 465 மி.மீ. (461), தூத்துக்குடி 425 மி.மீ. (367), விருதுநகர் 418 மி.மீ. (453).   மேலும் இப்பகுதிகளில் மக்காச்சோளம், நிலக்கடலை, பயறு வகைகள், காய்கறிகள், பருத்தி, சிறு தானியங்கள், மல்லிகை, செவ்வந்தி பயிரிடலாம். 

அதிக மழை பெறும் மண்டலமான கன்னியாகுமரியில் 495 மீ.மீ. (543). இப்பகுதியில் நெல், நிலக்கடலை, பயறு வகைகள் பயிரிடலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மலை மற்றும் அதிக உயரமுள்ள மண்டலமான நீலகிரி 476 மி.மீ. (462) ஆகும்.

மொத்தத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சராசரி மழை அளவை எட்ட வாய்ப்புள்ளதாகவும், இதில் கணிக்கப்பட்ட ஆய்வில் 60 சதவீதம் வரையில் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

English Summary: North east monsoon Published on: 29 September 2018, 04:08 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.