1.ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காத மக்களுக்கு ஜூலை 1 முதல் ரேஷன் பொருட்கள் கிடையாது
ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காத பொது மக்களுக்கு ஜூலை 1 ஆம் தேதி முதல் ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2.குறையப்போகிறது சமையல் எண்ணெய் விலை
வரும் நாட்களில், நூற்றாண்டு சமையலறை பட்ஜெட்டில் எளிய மக்கள் நிவாரணம் பெறலாம். காரணம், சமையல் எண்ணெய் விலையில் 6 சதவீதம் சரிவு ஏற்படலாம். அரசின் ஆலோசனையை ஏற்று சமையல் எண்ணெய் விலையை 6 சதவீதம் வரை குறைக்க சமையல் எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. சர்வதேச சந்தையில் பொருட்களின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கேற்ப உள்ளூர் மட்டத்தில் சமையல் எண்ணெய் விலையில் மாற்றம் தேவைப்படுவதாகவும் அரசாங்கம் கூறுகிறது.
3.தடையில்லா மின்சாரத்தை உறுதி செய்வதே இலக்கு - அமைச்சர் செந்தில் பாலாஜி
தமிழகத்தில் உள்ள மூன்று கோடிக்கும் மேற்பட்ட நுகர்வோருக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதே மின்சாரத்துறையின் இலக்கு எனத் தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழக மின்சாரத்துறையானது பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றி, புதிய மின்மாற்றிகளை நிறுவி, மின்விநியோக வலையமைப்பைப் பலப்படுத்தி வருகிறது. இந்த ஆட்சி தொடங்கியது முதலே நுகர்வோர் புகார்களை விரைவாக நிவர்த்தி செய்வது மற்றொரு முதன்மையான திட்டம் எனக் கூறியுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில், சேதமடைந்த 40,020 மின்மாற்றிகளை மாற்றியுள்ளதாகவும், மேலும் 388 துணை மின் நிலையங்கள் கட்ட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
4.அரசு HCL அறக்கட்டளையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் 95 கிராமங்களுக்கு உள்கட்டமைப்பு நிதிக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
HCL முயற்சியின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 95 கிராமங்களில் பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் வாழ்வாதார திட்டங்களை செயல்படுத்த மாநில அரசு HCL அறக்கட்டளையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
5.தமிழ்நாடு உணவுத் துறையின் புகார்களுக்கான போர்ட்டல்
தமிழ்நாடு உணவுத் துறையின் புகார்களுக்கான போர்ட்டல் இணையதளத்தை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அணுகலாம். மேலும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக அணுக ஸ்கிரீன் ரீடர் வசதியும் உள்ளது.
ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள அரசு மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், உணவுப் பாதுகாப்புத் துறையின் மொபைல் ஆப் மற்றும் இணையதளத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
‘தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு நுகர்வோர்’ என்ற மொபைல் செயலி மற்றும் www.foodsafety.tn.gov.in என்ற இணையதளத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார், இதில் நுகர்வோர்கள் பாதுகாப்பான உணவு மற்றும் இதர விவரங்களைக் கண்டறியலாம். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இணையதளத்தை அணுகலாம் மேலும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக அணுக ஸ்கிரீன் ரீடர் வசதியும் உள்ளது.
People who don't link Aadhaar number with ration card have no ration items|Oil price is low
6.தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று தொடங்குகிறது.
ஜூன் 4ந் தேதி வரை விண்ணப்பங்களைப் பதிவு செய்து அனுப்ப கால அவகாசம் விடுக்கப்பட்டுள்ளது.
https://www.tneaonline.org , https://www.tndte.gov.in
மேலும் படிக்க
ஜூலை 1 முதல் இவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடையாது: திடீர் அறிவிப்பு!
B.E, B.Arch படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பம்- விண்ணப்பிப்பது எப்படி?
Share your comments