1. செய்திகள்

ஏற்றுமதி அதிகரிப்பால் "வெங்காய விலை" மீண்டும் உயர்கிறது - கவலையில் மக்கள்!

Daisy Rose Mary
Daisy Rose Mary
Onion rate increased
Credit : India Today

அதிகரித்து வரும் வெங்காய ஏற்றுமதியால் சந்தையில் வெங்காய விலை மீண்டும் உயரத்தொடங்கியுள்ளது. 

மஹாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில், பெரிய வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு, உற்பத்தியை பொறுத்து, நாடு முழுதும் வெங்காய விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி

எதிர்பாரதவிதத்தில் கடந்தாண்டு பெய்த மழையால், உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு, வெங்காய விலை கிலோ 120 ரூபாய் வரை உயர்ந்தது. இதனால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். வெங்காய விலையை கட்டுப்படுத்தும் வகையில், அதன் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. வெங்காய இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து, ஆப்கானிஸ்தான், துருக்கி உள்ளிட்ட நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு கிலோ 100 ரூபாய் வரை விற்கப்பட்டது.

மீண்டும் உயரும் வெங்காய விலை

கூட்டுறவு மற்றும் தோட்டக்கலைத் துறை வாயிலாக மானிய விலையில் சென்னையில் 50 ரூபாய்க்கு வெங்காய விற்பனை நடந்தது. இந்நிலையில், வெங்காய அறுவடை, 2020 நவ., முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இதனால் டிசம்பரில் 1 கிலோ பெரிய வெங்காயம் 25 முதல் 30 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கிடங்குகளில் இருந்து மீண்டும் அரபு நாடுகளுக்கும் சிங்கப்பூர். மலேஷியாவிற்கும் வெங்காய ஏற்றுமதி துவங்கி உள்ளது. இதன் காரணமாக, வெங்காய விலை மீண்டும் அதிகரித்து வருகிறது.

 

மேலும் அதிகரிக்கும் அபாயம்

தற்போது, சென்னை உட்பட தமிழகம் முழுதும், 1 கிலோ வெங்காயம், 40 முதல், 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த விலை இன்னும் உயரக்கூடும் என்கின்றனர் வியாபாரிகள். மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு விதித்த தடையை நீக்காத நிலையில், எப்படி ஏற்றுமதி செய்யப்படுகிறது என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். வெங்காய விலையை கட்டுப்படுத்த மத்திய - மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் படிக்க...

விவசாயிகளுக்கு அடிக்கப்போகிறது ஜாக்பாட்-ரூ.1 லட்சம் கோடி மானியம்!

பண்ணைக் குட்டைகள் அமைக்க ரூ.75,000 மானியம்!

தமிழக கால்நடைத்துறை திட்டங்களுக்கு ரூ.1,464 கோடி நிதி வேண்டும் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கோரிக்கை!!

வண்ண வண்ண மலர்கள் விற்பனையில் அதிக லாபம் தரும் - பட்டன் ரோஸ் சாகுபடி!

இயற்கை விவசாயம் செய்ய 100 பேருக்கு ரூ.60 லட்சம் மானியம்!

English Summary: People worried on Onion prices rise again due to increase in exports Published on: 25 January 2021, 02:00 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.