1. செய்திகள்

விவசாயிகள் வாழ்வாதாரம் செழிக்க தரமான தேயிலை உற்பத்தி: அமைச்சர் தகவல்!

Poonguzhali R
Poonguzhali R

Quality tea production to improve farmers' livelihood: Minister informs!

தென்னிந்தியாவில் முதல் முறையாக குன்னூரில் 2 நாட்கள் நடைபெறும் தேயிலை கண்காட்சி குன்னூர் சிமிஸ் பூங்காவில் நேற்று தொடங்கியது. கடந்த ஆண்டு நீலகிரிக்கு 22 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.

குன்னூரில் உள்ள சிமிஸ் பூங்காவில் தென்னிந்தியாவில் முதல் முறையாக குன்னூரில் 2 நாட்கள் நடைபெறும் தேயிலை கண்காட்சி தொடங்கப்பட்டது. இந்த கண்காட்சியினைச் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். இந்த தொடக்க விழாவில் அமைச்சர் ராமச்சந்திரன் பேசியபோது, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பெறும் வகையில் அனைத்துத் துறைகளின் சார்பிலும் பல்வேறு சிறந்த திட்டங்களைத் தீட்டி தமிழகத்தை முதன்மை மாநிலமாக கொண்டு வரும் நோக்கில் செயல்படுத்தி வருகின்றார் என்று கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு நீலகிரிக்கு 22 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்திருக்கின்றனர். இந்த ஆண்டு அதனை விட அதிகமான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்ப்பில் உள்ளது. தேயிலை விற்பனை செய்பவர்கள், வாங்குபவர்களுக்கு நல்ல தேயிலை மற்றும் கலப்பட தேயிலை தூள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேயிலை கண்காட்சி நடத்தப்பட்டு இருக்கிறது.

நீலகிரியில் தரமான தேயிலை உற்பத்தியினைக் குறு, சிறு விவசாயிகள் மேற்கொள்ள தேயிலை வாரியம் மூலம் பயிற்சிகள் அளிக்கப்பட இருக்கின்றன. அந்த மாவட்டத்தில் உள்ள 15 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் 2 தொழிற்சாலைகளில் ஆா்தோடக்ஸ் வகை தேயிலையை உற்பத்தி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தரமான தேயிலை உற்பத்தியை மேற்கொள்வதன் மூலம் மாவட்டத்தின் பொருளாதாரம் மேம்படுவதோடு, விவசாயிகளின் வாழ்வாதாரமும் செழிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து தேயிலை கண்காட்சியினை முன்னிட்டு குன்னூர் டைகர் ஹில் எனும் பகுதியில் நீலகிரி மாவட்ட நிர்வாகம். தமிழக சுற்றுலாத்துறை, இந்திய தேயிலை வாரியம் மற்றும் இன் கோசர்வ் சார்பில் பொது மக்களிடம் தேயிலை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் மனித சங்கிலி தொடர் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தமிழக அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். இதில் 1500 சிறு, குறு தேயிலை விவசாயிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

New Gold rules: தங்க நகைகளை விற்க வேண்டுமா! இதை கவனிச்சிக்கோங்க!

மாநிலம் முழுவதும் 50 திணை விற்பனை நிலையங்கள்: அரசு முடிவு!

English Summary: Quality tea production to improve farmers' livelihood: Minister informs!

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.