1. செய்திகள்

கனமழையால் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை: மாணவர்களுக்கு ஹேப்பி!

R. Balakrishnan
R. Balakrishnan
Schools closed

வடகிழக்கு பருவமழை தொடங்கி சில நாள்களே ஆகியுள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.

பள்ளிகளுக்கு விடுமுறை

தொடர் மழை மழை காரணமாக இன்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகி வருகிறது.

சென்னை மாவட்டத்தில் இன்று ஒரு நாள் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி, பூந்தமல்லி, பொன்னேரி, திருவள்ளூர் தாலுக்காக்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் - குன்றத்தூர் பகுதியில் இயங்கும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் இன்று பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை? சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு!

இன்று முதல் இதெல்லாம் மாறப்போகுது: வந்தாச்சு புதிய விதிமுறைகள்!

English Summary: Schools closed today due to heavy rain: Happy students! Published on: 04 November 2022, 07:24 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.