Separate welfare board for Tamil Nadu salt workers started!
மாநிலம் முழுவதும் உள்ள உப்பளத் தொழிலாளர்கள் தனி நல வாரியத்தை வரவேற்றுள்ளனர். இது விளிம்புநிலை சமூகத்தை மேம்படுத்த உதவும் என்று பரவலாகப் பாராட்டப்பட்டு வருகிறது.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, மாநிலத்தில் உள்ள அமைப்புசாரா உப்பளத் தொழிலாளர்களுக்காகத் தமிழ்நாடு உப்பளத் தொழிலாளர் நல வாரியத்தை நிறுவுவதற்கான அரசாணையை நேற்று வெளியிட்டது. அதோடு, உப்பளத் தொழிலாளர்கள் தனி நல வாரியத்தை வரவேற்று, இது விளிம்புநிலை சமூகத்தை மேம்படுத்த உதவும் என்று கூறியிருக்கிறது.
இந்த உத்தரவின்படி, தமிழ்நாடு உப்பளத் தொழிலாளர் நல வாரியம் தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சட்டம், 1982 (தமிழ்நாடு சட்டம் 33, 1982) பிரிவு 6(1)ன் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்பு மற்றும் நல வாரியத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களாக உள்ள சுமார் 9,809 உப்பளத் தொழிலாளர்களுடன் வாரியம் செயல்படும். அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள், நடவடிக்கைகள் மற்றும் உதவிகள் உப்பளத் தொழிலாளர் நல வாரியத்திற்கும் விரிவுபடுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
வளர்ச்சி குறித்து கருத்து தெரிவித்த அமைப்புசாரா தொழிலாளர் சம்மேளன மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம்.கிருஷ்ணமூர்த்தி, நலவாரியம் அமைப்பது உப்பள தொழிலாளர்களுக்கு ஒரு விடியல் ஆகும். இது சந்தேகத்திற்கு இடமின்றி அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளை உறுதி செய்து, பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
"தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாப்பதில் இது ஒரு முற்போக்கான நடவடிக்கை எனவும், பிற மாநிலங்களில் உள்ள உப்பளத் தொழிலாளர்களுக்கு இதுபோன்ற சலுகைகள் இல்லை என்பதால் தமிழக அரசு நாட்டிற்கு ஒரு நல்ல முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது" என்று UWF இன் தேசிய ஒருங்கிணைப்பாளர் கீதா கூறியுள்ளார். தமிழ்நாடு உப்பளத் தொழிலாளர் நல வாரியத்தின் அமைப்பு, மாநிலம் முழுவதும் உள்ள கடலோர மாவட்டங்களில் உள்ள அமைப்புசாரா உப்பளத் தொழிலாளர்களை உயர்த்த உதவும் என்றும் கூறியுள்ளார்.
தமிழ்நாடு தொழிலாளர் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட 18 வாரியங்களும், பல்வேறு அரசு ஆணைகளின் மூலம் 16 வாரியங்களும் உட்பட 37 நல வாரியங்கள் தமிழக அரசிடம் தற்பொழுது உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
Share your comments