1. செய்திகள்

பருவமழை 2020 : எங்கு எப்போது மழை பொழியும்! - வானிலை மையம் தகவல்!

Daisy Rose Mary
Daisy Rose Mary

தென் மேற்கு பருவக்காற்று காரணமாகக் கோவை, நீலகிரி, தேனி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

4 மாவட்டங்களில் மழை வாய்ப்பு

கேரளாவைத் தொடர்ந்து தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இருப்பினும், தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் வெயில் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும், கோவை, நீலகிரி, தேனி, மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் தென் மேற்கு பருவக்காற்று காரணமாக ஒரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் நாளை, ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் , அதிகப்பட்ச வெப்பநிலை 38 டிகிரி குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

  • ஜூன் 17 முதல் ஜூன் 19 வரை மத்திய வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40- 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசும்
  • இன்று 15 முதல் ஜூன் 19 வரை தென்மேற்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50-60 கிலோமீட்டர் வேகத்தில் வீசும்
  • அதே போல் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40- 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசும்
  • இன்று மற்றும் ஜூன் 19 ஆகிய தேதிகளில் மத்தியமேற்கு அரபிக்கடலில் பலத்த காற்று மணிக்கு 40 -50 கிலோமீட்டர் வேகத்தில் வீசும்
  • இதனால் இந்த நாட்களில் மீனவர்கள் யாரும் இப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
  • மேலும் குளச்சல் கடல் பகுதி முதல் தனுஷ்கோடி வரை கடல் அலை 3.2 முதல் 3.6 மீட்டர் வரை ஒரு சில நேரங்களில் எழும்பக் கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது

கடந்த 24 மணி நேரத்தில் சின்னக்கல்லாரில் 3 செ.மீ, தேவாலா, வால்பாறை, அவலாஞ்சி, சோலையார், சின்கோனா ஆகிய பகுதிகளில் தலா 2 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

Credit By : Just Nashik

இந்திய வானிலை மையம்

இதேபோல் மகாராஷ்டிரா, குஜராத், மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 4-5 நாட்களுக்கு மழை தொடரும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கொங்கன், கோவா, மத்திய மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை முதல் மிக கனமழையும், தெற்கு மத்தியப்பிரதேசம், விதர்பா, சத்தீஸ்கர் மற்றும் மராத்வாடா பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வட அரபி கடல், குஜராத் மற்றும் மத்தியப்பிரதேசத்தின் இன்னும் சில பகுதிகளிலும், சத்தீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் பீகார் மற்றும் கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் சில பகுதிகளிலும் அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும், மத்திய அரபிக்கடல், வடகிழக்கு அரபி கடலின் சில பகுதிகள், குஜராத், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட் மற்றும் பீகாரின் இன்னும் சில பகுதிகள், மகாராஷ்டிராவின் மீதமுள்ள பகுதிகள், மத்தியபிரதேசத்தின் சில பகுதிகள், பெரும்பாலான பகுதிகளுக்குப் பருவமழை முன்னதாகவே தொடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்...

கோடை காலத்தில் இந்த உணவு சாப்பிடுவதை தவிருங்கள்!

Lockdown : வீட்டில் இருப்பவர்களா நீங்கள்? அப்போ இந்த தகவல் உங்களுக்கு தான்!

அட...! அகத்தி கீரையில் இவ்வளவு நல்ல விஷயங்கள் இருக்கிறதா?

 

English Summary: Tamil Nadu and Puducherry will receive rains in the next few days, the India Meteorological Department Published on: 15 June 2020, 02:32 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.