1. செய்திகள்

படைப்புழு தாக்குதலால் பாதிப்படைந்த விவசாகிகளுக்கு நிவாரணம்: தமிழக அரசு அறிவுப்பு

KJ Staff
KJ Staff
Tamil Nadu CM

அமெரிக்கன் படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட  2 லட்சம் விவசாகிகளுக்கு நிதியுதவி அளிப்பதாக  சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை பொறுத்தவரை 80% அதிகமான சிறு மற்றும் குறு விவசாகிகள் மக்காச்சோளத்தை மானாவாரியாகவும், இறவை பயிராகவும், 3.5 லட்சம் ஹெக்டரில் சாகுபடி செய்யப்படுகிறது. படைப்புழு தாக்குதலால்  2 லட்சம் விவசாகிகள் பாதிப்படைந்துள்ளனர். இதற்காக அரசு ரூ. 186.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

Army Worm

மக்காச்சோளம் குறைந்த தண்ணீரில் விளையும் என்பதால் பெரும்பாலான விவசாயிகள் தற்போது இதனை அதிக அளவில் பயிரிட்டு வருகின்றனர். படைப்புழு தாக்குதலினால் மக்காச்சோளம் சாகுபடி வெகுவாக பாதித்தது. இதனால் மக்காச்சோள விவாசகிகள்  உரிய நிவாரணம் தரும்படி கோரிக்கை விடுத்தனர்.

தமிழகத்தில் மக்காச்சோளமனது 17 மாவட்டங்களில் பயிரிட்டு வருகின்றனர். பாதிக்க பட்ட விவசாகிகளுக்கு  கோடை உழவு குறித்த விழிப்புணர்வு, படை புழு தாக்குதல் குறித்த விழிப்புணர்வு கொடுக்க பட்டுள்ளது. மேலும் தமிழக அரசு பயிர் காப்பீடுத் திட்டத்தில் இது வரை சேராத விவசாயிகள் விரைவில் சேர்ந்து இழப்பீடுகளை தவிர்க்கும் படி கேட்டு கொண்டார்.

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: Tamil Nadu Chief Minister Announced Relief Fund For Maize Farmers Published on: 04 July 2019, 03:58 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.