1. செய்திகள்

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவை மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு

KJ Staff
KJ Staff

தமிழகம் மற்றும் புதுவை மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்றும் , நாளையும்  (மே 13, 14) ஆகிய தேதிகளில் தமிழகம் உட்பட புதுவை மாநிலங்களில், ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

கடந்த மே 4 ஆம் தேதி அக்னி வெயில் தொடங்கியது. வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வெப்பச்சலனம் ஏற்பட்டு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, விருதுநகர் மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களிலும், புதுவையில் சில இடங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும்.காற்றின் வேகமானது மணிக்கு 40 கி.மீ முதல் 50 கி.மீ என்ற அளவில் இருக்கும்.

சென்னை பெரும்பாலும் மேக மூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலையானது  39 டிகிரி செல்சியஸில் இருந்து 29 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையாக ஆகவும் இருக்கும்.

நேற்று தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. கோத்தகிரி,ஊட்டி, சூளகிரி, கேத்தி, நடுவட்டம், தளி,   சேரன்மாதேவி, பேச்சிப்பாறை , பெரியநாயக்கன்பாளையம், கூடலூர்  ஆகிய மாவட்டங்களில் மழை பெய்தது. அதிகபட்சமாக கோத்தகிரியில் 7 செ.மீ மழையும், தளி, கேத்தி, நடுவட்டம், சூளகிரி பகுதிகளில் குறைந்தபட்சமாக 1  செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.

English Summary: Weather Forecast Heavy Rain: Tamil Nadu and Pondicherry Seems Cloudy Published on: 13 May 2019, 02:50 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.