1. செய்திகள்

காற்றழுத்த தாழ்வால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மீண்டும் மழை

KJ Staff
KJ Staff
Expects Heavy Rain

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. இந்த மழையானது மேலும் மூன்று தினங்களுக்கு நீடிக்கும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால்  தெற்கு கடலோர மாவட்டங்களிலும், வெப்பச்சலனம் காரணமாக வட மாவட்டங்களிலும், லேசான முதல் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தேனி, நீலகிரி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் கன மழை பெய்யும் எனவும், மேலும் இது 21-ம் தேதி வரை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் குன்னூரிலும், அதை தொடர்ந்து தூத்துக்குடி,    திருநெல்வேலி, பாபநாசம், மணிமுத்தாறு, ராஜபாளையம் ஆகிய இடங்களில் அதிக அளவு மழை பதிவாகி உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், வெப்பநிலை அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்சம் 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: Weather Forecast Today: Expects Heavy Rain and Thunderstorms in Tamil Nadu and Pondicherry Published on: 18 November 2019, 10:31 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.