1. செய்திகள்

தமிழகம் மற்றும் புதுவையில் கடும் அனல் காற்று வீச கூடும்: சென்னை வானிலை மையம் அறிவுப்பு: தென்மேற்கு பருவமழை தாமதம்

KJ Staff
KJ Staff

தமிழகம் மற்றும்  புதுவையில் இன்னும் இரண்டு நாட்களுக்கு கடுமையான அனல் காற்று வீச கூடும். தென்மேற்கு பருவமழை  தாமதமாவதால் வெயில் இன்னும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும்.

வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். தற்போது வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் இன்னும் இரு தினங்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாகவும், கடும் அனல் காற்று வீச வாய்ப்பிருப்பதாகவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெயிலின் தாக்கமானது தென் மாவட்டங்களை விட, வட மாவட்டங்களான சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர்,வேலுார், திருத்தணி உள்பட 11 மாவட்டங்களில் மிக அதிகமாக இருக்கும் என கூறியுள்ளது. பெரும்பாலான வட மாவட்டங்களில் வெயிலானது சதத்தை நெருங்கி உள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையில் வெப்பநிலையானது அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி ஆக இருக்கும் என கூறியுள்ளது. நாளை 41 டிகிரியாக உயரும் எனவும் தெரிவித்துள்ளது.

கடற்கரையோர   மாவட்டங்களில் இந்த அனல் காற்றின் தாக்கம் அதிகமாக  இருக்கும் எனவும்,  குறிப்பாக சென்னை மற்றும் புதுச்சேரியில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் பகல் நேரங்களில் வெளியில் செல்வதை  தவிர்க்கும் படி அறிவுறுத்தி உள்ளனர்

அந்தமான் மற்றும் நிக்கோபார் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில் தமிழகத்தில் இந்த மாத இறுதியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

English Summary: Weather Forecast Today In Chennai And Pondy: Temperature Shows 40 Degree And Above: Reported By Chennai Meteorological Department Published on: 25 May 2019, 12:58 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.