1. மற்றவை

மத்திய அரசுப் பணியாளர்களுக்கு அருமையான அறிவிப்பு: 4% அகவிலைப்படி உயர்வு!

R. Balakrishnan
R. Balakrishnan
4% DA Hike

மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி மாதத்தில் 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஜூலை மாதத்தில் அகவிலைப்படி உயர இருப்பதாக மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு நிதி ஆண்டிலும் இரண்டு முறை அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஜனவரி ஒன்றாம் தேதி மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி நான்கு சதவீதம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர இருப்பதாக மத்திய அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, பிப்ரவரி மாதத்தில் அனைத்திந்திய நுகர்வோர் விலை குறியீட்டில்(AICPI) சரிவு ஏற்பட்ட நிலையில் மார்ச் மாதத்தில் இந்த எண்ணிக்கை மீண்டும் அதிகரித்தது.

இதனால், அனைத்திந்திய நுகர்வோர் விலை குறியீட்டின் அதிகரிப்பு காரணமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்தில் நான்கு சதவீதம் வரைக்கும் அகவிலைப்படி உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த அகவிலைப்படி உயர்வினால் கிட்டத்தட்ட 52 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 48 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறலாம் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

மேலும் படிக்க

பழைய பென்சன் திட்டம் சாத்தியமே இல்லை: நிதியமைச்சர் எச்சரிக்கை!

பென்சன் வாங்குவோருக்கு நற்செய்தி: பென்சன் தொகையை உயர்த்திய மாநில அரசு!

English Summary: Great Announcement for Central Govt Employees: 4% DA Hike! Published on: 02 May 2023, 07:09 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.