1. விவசாய தகவல்கள்

நெற்பயிருக்கு காப்பீடு செய்ய மீண்டும் வாய்ப்பு- காலஅவகாசம் டிச.15ம் தேதி வரை நீட்டிப்பு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Opportunity to insure paddy again- Deadline extended to Dec. 15!
Credit : Asia Insurance Post

திருநெல்வேலி மாவட்டத்தில் பிசான பருவ நெற்பயிருக்கு காப்பீடு செய்ய அளிக்கப்பட்டிருந்த காலஅவகாசம் வரும் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இரா.கஜேந்திர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

  • இயற்கை சீற்றத்தால் பயிர் பாதிப்புக்கு இழப்பீடு பெற, திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் நெல் பயிர் காப்பீடு செய்வதற்கு 2020ம் ஆண்டு சிறப்பு பருவமாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் நிறுவனம் செயல்படுத்தும் இத்திட்டத்தின் கீழ் 320 வருவாய் கிராமங்கள் அடங்கும்.

  • கடன் பெறும் விவசாயிகள் அந்தந்த வங்கிகளிலும், கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்களிலும் ஒரு ஏக்கர் நெல் பயிருக்கு ரூ.444 வீதம் பிரீமியம் செலுத்த வேண்டும்.

  • காப்பீடு செய்வதற்கான அவசாகம் இம்மாதம் 15ம் தேதிக்குள் நீட்டிக்கப்பட்டுள்ளது. முன் மொழிவு விண்ணப்பத்துடன் கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், சிட்டா, பட்டா, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம், ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல் களை இணைக்க வேண்டும்.

  • கட்டண தொகை செலுத்திய பிறகு அதற்கான ரசீதை பெற்றுக் கொள்ளவும், மேலும் விவரங் களுக்கு அருகிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

10 ரூபாய் நாணயத்திற்கு 10% தள்ளுபடி- ஓட்டல் உரிமையாளரின் அதிரடிச் சலுகை!

புங்கன் நடவுக்கு ரூ.21,000 மானியம் - வேளாண்துறை அறிவிப்பு

மகசூலை பாதிக்கும் பூச்சிகள்- இயற்கை முறையில் துவம்சம் செய்ய எளிய வழிகள்!

English Summary: Opportunity to insure paddy again- Deadline extended to Dec. 15! Published on: 02 December 2020, 11:28 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.