1. விவசாய தகவல்கள்

விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
CIBIL score

வேளாண் தொழிலில் ஈடுபடும் விவசாயிகள் தங்களது விவசாய பணிகளுக்காகவும், அல்லது தொழிலை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லவும் வங்கிக்கடனை நாடியுள்ளனர். இந்நிலையில் விவசாயிகள் கடன் பெறுவதற்கான CIBIL ஸ்கோரை சரியாக பராமரிக்க அவசியமான 5 காரணங்கள் என்ன என்பதை இப்பகுதியில் காணலாம்.

ஃபின்டெக் நிறுவனங்களின் தோற்றம் மற்றும் அவற்றின் பரவலால், விவசாயிகளுக்கு கடன் கிடைப்பது பெரிய பிரச்சனையாக இல்லை. இருப்பினும், அதிக வட்டி விகிதங்கள் மற்றும் பல காரணங்களால் பல விவசாயிகள் கடன் பெறுவதில் சில சிக்கல்களை தற்போதும் எதிர்கொள்கின்றனர்.

கடன் பெறுவதில் சிக்கல் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக திகழ்வது மோசமான CIBIL மதிப்பெண்கள் தான். விவசாயிகள் தங்கள் தேவைக்கேற்ப விவசாய இடுபொருட்கள், டிராக்டர் கடன் அல்லது வேறு ஏதேனும் கடன்களுக்கு கடன் வாங்க விரும்பினால், வங்கிகளும்- NBFC-களும் இந்த CIBIL மதிப்பெண்களை அடிப்படையாக வைத்துத்தான் கடன் தர முன்வருகின்றன.

CIBIL ஸ்கோர் என்றால் என்ன?

CIBIL மதிப்பெண் என்பது நீங்கள் வாங்கிய உங்கள் ஒட்டுமொத்த கடன் வரலாற்றினை அடிப்படையாக கொண்ட ஒரு கூட்டு அறிக்கையாகும். இது முக்கியமாக கிரெடிட் கார்டு பெற அல்லது கடன் விண்ணப்ப செயல்முறையில் முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுவாக உங்கள் கிரெடிட் கார்டு அல்லது லோன் விண்ணப்பங்களின் ஒப்புதலுக்கு CIBIL ஸ்கோர் 750 அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில் இருப்பது சிறந்தது. எனவே, ஒரு நல்ல CIBIL மதிப்பெண்ணை பராமரிப்பது முக்கியம். விவசாயிகள் தங்கள் CIBIL ஸ்கோரை சரியாக பராமரிக்க வேண்டிய கட்டாயம் என்ன? விவரங்கள் பின்வருமாறு-

கடன் வசதிகளுக்கான அணுகல்: அதிக CIBIL மதிப்பெண் விவசாயிகளுக்குத் தேவையான நிதி உதவியை எளிதாகப் பெற உதவுகிறது.

அவர்கள் புதிய கருவிகளை வாங்க விரும்பினாலும், தங்கள் நீர்ப்பாசன முறையை மேம்படுத்த விரும்பினாலும் அல்லது தங்கள் பண்ணையை பெரிதாக்க விரும்பினாலும், நல்ல கிரெடிட் ஸ்கோர் அவர்களுக்குத் தேவையான பணத்தைப் பெறுவதற்கான கூடுதல் தேர்வுகளை வழங்குகிறது.

நல்ல கிரெடிட் மதிப்பெண்களைக் கொண்ட விவசாயிகள் தங்கள் தேவைகளுக்கு ஏற்பவும், குறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் பணத்தைத் திரும்பச் செலுத்துவதற்கான நெகிழ்வான வழிகளிலும் கடன்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஒப்பந்தங்களில் சலுகை:

வலுவான கிரெடிட் ஸ்கோர் விவசாயிகளுக்கு கடன் பெற உதவுவது மட்டுமல்லாமல், ஒப்பந்தங்களைப் பற்றி பேசுவதிலும் அவர்களுக்கு உதவிக்கரமாக உள்ளது. வலுவான நிதி நிலையில் இருந்து பேச்சுவார்த்தை நடத்துவது ஒரு விவசாயியின் வணிகத்தை வலுவாகவும், நீண்ட காலம் நீடிக்கக்கூடியதாகவும் ஆக்குகிறது.

Read also: சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு குட் நியூஸ்- பயிர் காப்பீடு தொடர்பாக முக்கிய அறிவிப்பு

கடன் பெறும் வாய்புகள் அதிகரிப்பு:

வலுவான கிரெடிட் ஸ்கோரை வைத்திருப்பது வழக்கமான கடன்களைப் பெறுவதற்கு மட்டுமல்ல. இது விவசாயிகள் மற்ற பண வாய்ப்புகளை முயற்சிக்கவும் உதவியாக இருக்கும்.

ஒரே ஒரு வழியை மட்டுமே எப்போதும் கடன் வாங்க நம்பியிருக்க முடியாது. அத்தகைய சூழ்நிலையில், நல்ல கிரெடிட் ஸ்கோர் தனியார் நிறுவனங்களை அணுகுவதை எளிதாக்குவதோடு, தேவைக்கேற்ற கடனை பெறவும் உதவியாக இருக்கும்.

காப்பீட்டு பிரீமியங்கள் மற்றும் இடர் மேலாண்மை:

காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் இடர்பாடுகள் மற்றும் சந்தை விலையில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவையும் விவசாயிகளுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. இந்த எதிர்பாரா பிரச்சினைகளை கையாள்வதும் விவசாயத்தின் ஒரு பெரிய பகுதியாக மாறியுள்ள சூழ்நிலையில் நல்ல கிரெடிட் ஸ்கோர் இருப்பதும் இதற்கு உதவும்.

காப்பீட்டு நிறுவனங்கள் காப்பீட்டுக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் போது, அவர்கள் பெரும்பாலும் ஒரு நபரின் கிரெடிட் ஸ்கோரைப் பார்க்கிறார்கள். ஒரு நல்ல கிரெடிட் ஸ்கோர், பணத்தை நிர்வகிப்பதில் ஒருவர் திறமையானவர் என்பதைக் காட்டுகிறது, ஒருவேளை அவர்கள் தங்கள் காப்பீட்டு பில்களை சரியான நேரத்தில் செலுத்தலாம்.

தொழில்நுட்பம் தழுவல் மற்றும் விவசாய கண்டுபிடிப்பு:

அதிக கிரெடிட் மதிப்பெண் பெற்ற விவசாயிகள் உயர் தொழில்நுட்ப விவசாய கருவிகள் மற்றும் ஸ்மார்ட் நீர்ப்பாசன முறைகள் போன்றவற்றிற்கு பணம் பெறுவதற்கான சிறந்த வாய்ப்புகளை வழங்குகிறது.

இந்தத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விவசாயிகள் தங்கள் வளங்களைச் சிறப்பாகப் பயன்படுத்தவும், சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு விவசாய பணிகளை மேற்கொண்டு வருவாய் ஈட்டவும் வாய்ப்புள்ளது.

டிராக்டர்கார்வன் எப்படி விவசாயிகளுக்குக் கடன் பெற அணுகுவதை எளிதாக்குகிறது?

டிராக்டர்கார்வன் போன்ற பல டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்கள், நல்ல கடன் மதிப்பெண்ணுடன் கூடிய விவசாயிகளுக்கு சிரமமில்லாமல் கடனுதவியை எளிதாக்குகின்றன.

டிராக்டர்கார்வன் என்பது இந்திய விவசாயிகள் தங்கள் பண்ணை இயந்திரமயமாக்கல் கனவுகளை நிறைவேற்ற நம்பும் ஒரு முன்னணி தளமாகும். விவசாயிகள் தாங்கள் பயன்படுத்திய டிராக்டரை விற்பதற்கும், மற்றவற்றை வாங்குவதற்கும், நிதியுதவி செய்வதற்கும் அவர்களுக்கு அனைத்து வகையான உதவிகளை வழங்குகிறது. டிராக்டர்கள் தவிர, விவசாயக் கருவிகள், அறுவடை இயந்திரங்கள் மற்றும் வேளாண் கருவிக்களுக்கான உதிரிப்பாகங்கள் ஆகியவற்றை பெறுவதற்கும் உதவி செய்கிறது.

Read also:

மிக்ஜாம் புயலால் நீரில் மூழ்கிய பயிர்கள்- விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை!

MFOI VVIF kisan Bharat yatra: ராஜஸ்தான் மாநில விவசாயிகள் கௌரவிப்பு

English Summary: What is the need for farmers to maintain CIBIL scores Published on: 13 December 2023, 12:49 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.