1. வாழ்வும் நலமும்

தமிழகத்தில் அடுத்த 2 வாரங்களில் கொரோனா தொற்று உச்சத்தைத் தொடும்- அமெரிக்க நிறுவனம் எச்சரிக்கை!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Corona infection to reach peak in Tamil Nadu in next 2 weeks - US warns!
Credit : Webmd

தமிழகம் முழுவதும் அடுத்த 2 வாரங்களில் கொரோனாத் தொற்றின் அளவு உச்சத்தைத் தொடும் என அமெரிக்காவின் சுகாதார மதிப்பீடு ஆய்வு நிறுவனமான ஐ.எச்.எம்.இ. எச்சரித்துள்ளது. மேலும் தினமும் இறப்பு எண்ணிக்கை 850 ஆக அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

கொரோனா 2-வது அலை (Corona 2nd wave)

இந்தியாவில் கொரோனாத் தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக உள்ளது. பல மாநிலங்களில் ஒற்றை நாள் தொற்றின் அளவு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது.

இதேபோல், தமிழகத்திலும் தொற்றின் பாதிப்பு அதிகரித்துக்கொண்டு செல்கிறது. பரவலைக் கட்டுப்படுத்த அரசுப் போர்க்கால நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ள போதிலும், பரவல் கட்டுப்படுத்தப்பட வில்லை. தினமும் தொற்றின் அளவு உயர்ந்துகொண்டே உள்ளது. உயிரிழப்போர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

எச்சரிக்கை (Warning)

இந்த நிலையில், அடுத்த 2 வாரங்களில் தொற்றின் அளவு உச்சத்தைத் தொடும் என அமெரிக்காவின் (America) சுகாதார மதிப்பீடு ஆய்வு நிறுவனமான ஐ.எச்.எம்.இ. எச்சரித்துள்ளது.

பலி உயரும் (Kills will rise)

கொடூரக் கொரோனாவிற்கு பலியாவோரின் எண்ணிக்கையும் 850 ஆக அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், தொற்று பரவலைத் தடுப்பதற்கான வழிகளையும் இந்த ஆய்வு நிறுவனம் பட்டியலிட்டுள்ளது.

பரவலைத் தடுக்கும் யுக்தி (Strategy to prevent spread)

முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவது ஆகிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தொற்று பரவல் வேகத்தை கட்டுப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 அடி வரை (Up to 6 feet)

இதனிடையே கொரோனாப் பாதிப்பிற்கு ஆளான நபர்களிடம் இருந்து 6 அடி வரை நோய்த்தொற்று அபாயம் இருப்பதுத் தெரியவந்துள்ளது.அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் புதிய வழிகாட்டுதல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

காற்றின் மூலம் பரவும் (Spread through the air)

அதில், காற்றின் மூலம் குறிப்பிட்ட தூரத்திற்கு கோவிட்-19 வைரஸ் பரவும். இதனை சுவாசிக்கும் அனைவருக்கும் நோய்த்தொற்று பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இனி பாதிப்பிற்கு ஆளான நபர்களிடம் இருந்து 6 அடி தூரத்தில் இருந்தால் கூட காற்றின் மூலம் கொரோனா வைரஸ் பரவும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்குக் காற்றோட்டம் குறைந்த அல்லது அதிக கூட்டம் நிறைந்த உள்ளரங்கங்களில் நடைபெறும் நிகழ்வுகள் முக்கிய காரணமாகும்.

ஒரு மீட்டர் தூரம் வரை (Up to a distance of one meter)

ஏனெனில் போதிய அளவில் காற்றோட்டம் இல்லாத காரணத்தால் வைரஸ் கிருமிகள் காற்றிலேயே நீண்ட நேரம் நிலைத்திருக்கும். இதன்மூலம் காற்றில் ஒரு மீட்டர் தூரம் வரை கூட பயணிக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

தடுப்பூசியும் செயல் இழக்கலாம்! எச்சரிக்கிறது உலக சுகாதார நிறுவனம்!

கொரோனா சிகிச்சைக்கு உதவுகிறது பசுவின் பால்!

தடுப்பூசி செலுத்தும் வேகம் குறைந்தால் அடுத்தடுத்த அலைக்கு வாய்ப்பு: பிட்ச் எச்சரிக்கை!

English Summary: Corona infection to reach peak in Tamil Nadu in next 2 weeks - US warns! Published on: 12 May 2021, 09:31 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.