
2nd phase, 4 direct paddy purchase station system in Ariyalur!
அரியலூர் மாவட்டத்தில் நவரைப் பட்டத்தில் சாகுபடி செய்த நெல்லை கொள்முதல் செய்வதற்காக குழுமூர், கோவிந்தபுத்தூர், அருள்மொழி, இடங்கண்ணி ஆகிய 4 இடங்களில் இரண்டாம் கட்டமாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்ய விரும்பும் விவசாயிகள் அருகாமையில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆதார், சிட்டா, அடங்கல் மற்றும் வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை நேரில் கொண்டு சென்று, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் ஆதார் எண்ணை உள்ளீடு செய்து E-KYC கொடுத்து Blue Tooth Printer கையடக்க கருவியில் விவசாயிகளின் விபரங்கள் தெரியவரும். இதனடிப்படையில், முன்பதிவு செய்யப்படும்.
நேரடி நெல் கொள்முதல் மைய அலுவலர் விவசாயிகள் அளிக்கும் ஆவணங்கள் அடிப்படையில் பதிவுகள் மேற்கொள்வார். பதிவு உறுதி செய்ததும், சம்மந்தப்பட்ட விவசாயி செல்போன் எண்ணிற்கு தகவல் அனுப்பப்படும்.
பதிவு செய்த விண்ணப்பங்களின் விவரம், சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு அனுப்பப்பட்டு, விவரங்கள் முழுமையாக சரிபார்க்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் ஒப்புதல் அல்லது நிராகரிப்பு செய்யப்படும், ஒப்புதல் அளிக்கப்பட்ட விவசாயிகள் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேதி மற்றும் நேரத்தில் மட்டுமே சம்மந்தப்பட்ட மையத்திற்கு நெல்லை கொண்டு சென்று விவசாயிகளின் கைரேகையை பதிவு செய்து விற்பனை செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ஜா.அனி. மேரி ஸ்வர்ணா, அவர்கள் தெரிவித்துள்ளார்.
எனவே, அரியலூர் மாவட்ட விவசாயிகள், நவரைப் பட்டத்தில் சாகுபடி செய்த நெல்லை கொள்முதல் செய்வதற்காக அமைக்கப்பட்ட நிலையத்தை பயன்படுத்தி, நெல் கொள்முதல் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் படிக்க:
மகளிர் உரிமைத் தொகை பெற கோவை மகளிருக்கு மற்றும் ஓர் வாய்ப்பு! பயன்படுத்திக் கொள்ளவும்!
எண்ணெய் பனை சாகுபடிக்கான மெகா தோட்ட இயக்கம் - மானியம் பெற அழைப்பு!
Share your comments