1. செய்திகள்

கடந்த ஒரு மாதத்தில் இது மூன்றாவது முறை.. மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
CM Stalin's letter to Modi seeking release of captive Indian fishermen

பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 16 இந்திய மீனவர்களும், அவர்களது மீன்பிடிப் படகுகளும் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றினை விடுவித்திட தூதரகத்தின் வழிமுறைகள் வழியாக நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் போது இலங்கை கடற்படையினரால் தாக்குதலுக்கு உள்ளாவதும், தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை சிறைப்பிடிப்பதும் நீண்ட காலமாக தொடர்ந்து வருகிறது. இதற்கான தீர்வை காண தமிழக அரசு , ஒன்றிய அரசினை தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், சமீபத்தில் நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 16 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் (12.03.2023) அன்று இரண்டு விசைப்படகுகளுடன் (பதிவு எண்: IND-TN-08-MM-81 மற்றும் IND-TN-06-MM- 7818) சிறைபிடிக்கப்பட்டதை பிரதமர் மோடியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.  

இந்திய மீனவர்கள் இவ்வாறு இலங்கையைச் சேர்ந்த சிலர்/ இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது கடந்த ஒரு மாதத்திற்குள் நடந்த மூன்றாவது சம்பவமாகும் என்றும் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பியுள்ளனர் என்பதை சுட்டிக்காட்டியுள்ள முதல்வர், அடிக்கடி நிகழும் இதுபோன்ற தாக்குதல் மற்றும் சிறைபிடிப்பு சம்பவங்கள் ஏழை மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து அவர்களின் மனதில் அச்ச உணர்வை உருவாக்குகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தனது முந்தைய கடிதங்களில், இந்த விவகாரத்தை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும், அந்த கடிதத்திற்கு வெளியுறவுத் அமைச்சரும், இந்த விவகாரத்தை இலங்கை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் தெரிவித்து இருந்தார்.  இருப்பினும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் கடிதத்தில் தனது வருத்தத்தினை பதிவு செய்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகள் நிரந்தரமாக பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்கவும் பிரதமர் மோடி உடனடியாக இதில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என முதலமைச்சர் தனது கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும்,  இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 16 மீனவர்களையும், 102 மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிக்க தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலவரப்படி, தமிழ்நாடு மீனவர்களின் 102 மீன்பிடிப் படகுகள் இலங்கை வசம் உள்ளதாகவும், இலங்கையால் விடுவிக்கப்பட்ட 6 மீன்பிடிப் படகுகள் இன்னும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ள முதல்வர், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 16 மீனவர்களையும், 102 மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவித்திட தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் வலியுறுத்தியள்ளார்.

மேலும் காண்க:

மின் மோட்டார் குதிரைத்திறன் ஏற்ப மானியத்துடன் விவசாயிகளுக்கு மின் இணைப்பு- விண்ணப்பிக்க தகுதி என்ன?

English Summary: CM Stalin's letter to Modi seeking release of captive Indian fishermen Published on: 14 March 2023, 09:40 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.