1. செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் அமலாகிறது முழு ஊரடங்கு? விவரம்!

T. Vigneshwaran
T. Vigneshwaran
Full curfew in Tamil Nadu again?

தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இதன் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், இரவு நேர ஊரடங்கும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

கொரோனா பரவல் குறைந்து வந்தாலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என, தமிழக சுகாதாரத் துறை அறிவுறுத்தி வருகிறது. எனினும், பொது மக்கள் வெளியே செல்லும் போது, முகக் கவசம் அணியாமல் அலட்சியத்துடன் செல்கின்றனர். இதன் காரணமாக, வரும் நாட்களில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரிட்டன் நாட்டில், ஒமைக்ரான் வைரஸ் தொற்றின் திரிபான, "பிஏ 2" வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இது, "அதி வேகமாகப் பரவக் கூடியது என்றும், அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தக் கூடியது" என்றும் ஜப்பான் நாட்டைைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த வைரஸ் தொற்று ஒமைக்ரான் வைரஸ் தொற்றைப் போல், இந்தியாவுக்குள் பரவி பாதிப்பை ஏற்படுத்தும் பட்சத்தில், தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இரவு நேர ஊரடங்கு, பொது இடங்களில் கட்டுப்பாடுகள், கடைகளுக்கு நேரக் கட்டுப்பாடுகள் போன்றவை மீண்டும் அமலாக வாய்ப்பு உள்ளது. பிஏ 2 வைரஸ் தாக்கத்தின் தீவிரத்தை பொறுத்தே இது குறித்து முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

மேலும் படிக்க:

தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்

ஆதார் இருந்தால் 8 லட்சம் கடன் பெறலாம்- PNB வங்கி

English Summary: Danger: Full curfew in Tamil Nadu again? Published on: 09 March 2022, 06:40 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.