1. செய்திகள்

குப்பைகளை பிரத்தெடுக்கவில்லை என்றால் ரூ. 5000 வரை அபராதம்

Deiva Bindhiya
Deiva Bindhiya
Fines ranging from Rs.100 to Rs.5000 if garbage is not segregated

சென்னை: திடக்கழிவு மேலாண்மை துணைச் சட்டம், 2019ன் கீழ் உள்ள விதியை அமல்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளதால், வீட்டுக் குப்பைகளை தரம் பிரிக்கத் தவறியதற்காக, நகரவாசிகள் விரைவில் ரூ.100 அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். குப்பை கிடங்குகளுக்கு அனுப்பப்படும் குப்பைகளை குறைக்க, இது முக்கிய படியாகும்.

திடக்கழிவு மேலாண்மை துணைச் சட்டத்தின் அட்டவணை V இன் படி, குடிமை அமைப்பு தனி நபர் வீடுகளுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படலாம். அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் குழு வீடுகளுக்கு 1,000 ரூபாயும், மொத்த குப்பைகளை வெளியேற்றுவோர்களுக்கு 5,000 ரூபாயும் அபராதம் விதிக்கப்படுகிறது. அதிகாரிகளின் கூற்றுப்படி, நகரின் 15 மண்டலங்களில் ஒரு நாளைக்கு 5,200 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இது 95% வீடுகளில் கன்சர்வேன்சி பணியாளர்களால் சேகரிக்கப்படுகிறது மற்றும் பாதிக்கும் குறைவான வீடுகளில் மட்டுமே மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என பிரிக்கப்படுவது குறிப்பிடதக்கது.

"குப்பைகளை பிரிக்காத குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தல்களுடன் கூடிய அறிவிப்பு வழங்கப்படும் மற்றும் 15 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். தரம் பிரிக்கப்படாத குப்பைகளை தொடர்ந்து கொடுத்தால், ஒரு நாளைக்கு, 100 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்,'' என்று அதிகாரிகளால் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரிக்கப்பட்ட குப்பைகள் செயலாக்க மையங்களுக்கு அனுப்பப்படும் அதே வேளையில், பிரிக்கப்படாத குப்பைகள் வள மீட்பு மையங்களுக்கு அனுப்பப்படுகின்றன. அங்கிருந்து, மக்காத உலர் குப்பைகள் மறுசுழற்சி செய்பவர்களுக்கு வழங்கப்படுகிறது, அதே நேரத்தில் ஈரமான குப்பை உரம் மற்றும் உயிர்-சிஎன்ஜி தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. பிளாஸ்டிக் மூட்டைகள், சிமென்ட் ஆலைகளுக்கும், மீதமுள்ள குப்பைகள் பெருங்குடி, கொடுங்கையூரில் உள்ள குப்பை கிடங்குகளுக்கும் அனுப்பப்படுகிறது.

"தற்போது, எங்கள் குடியிருப்பில் உள்ள சில வீடுகளில் குப்பைகளை தரம் பிரித்து வைத்தாலும், அவை சேகரிக்கப்பட்ட பிறகு பிரிக்கப்படாத குப்பைகளுடன் கலக்கப்படுகின்றன. மாநகராட்சியும் சரி செய்ய வேண்டும்,'' என, தி.நகர் குடியிருப்போர் நல சங்கத்தைச் சேர்ந்த வி.எஸ்.ஜெயராமன் கூறினார். ஏப்ரல் 4 முதல் மே 5 வரை, பிரித்தெடுக்காத 35 மொத்தமாக குப்பைகளை வழங்குவோர்களுக்கு, அதிகாரிகள் ரூ.1.5 லட்சம் அபராதம் விதித்தனர் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க:

அமுதம் திட்டத்தை துவக்கி வைத்தார், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

தமிழகம்: தென் சென்னையில் மே 11ம் தேதி மேட்ரோவாட்டர் சேவை தடைபடும்

English Summary: Fines ranging from Rs.100 to Rs.5000 if garbage is not segregated Published on: 10 May 2022, 11:28 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.