1. செய்திகள்

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நல்ல செய்தி!

T. Vigneshwaran
T. Vigneshwaran
Schemes School/College Students

செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கொரோனா தொற்று ஊரடங்கு காரணத்தால் தற்போது வரை பள்ளி, கல்லூரிகள்‌ திறக்கப்படாத நிலையில்‌. தமிழக அரசு அறிவித்த கொரோனா ஊரடங்கு தளர்வுகள்‌ மற்றும்‌ அரசு வழிகாட்டுதல்‌ நெறிமுறைகளின்‌ கீழ், பள்ளி மற்றும்‌ அரசுக் கல்லூரிகள் வரும்‌ 01.09.2021 முதல்‌ திறக்கப்பட உள்ளன.

எனவே 2021-22 கல்வியாண்டில்‌, மாணவர்‌/மாணவியர்களுக்கான கட்டணமில்லாப் பேருந்து பயண அட்டை  போக்குவரத்துக்‌ கழகங்களால்‌ வழங்கப்படும்‌வரை, அரசுப் பேருந்துகளில்‌ பள்ளி மாணவ மாணவியர் சீருடை அல்லது பள்ளிகளில்‌ வழங்கப்பட்ட புகைப்படத்துடன்‌ கூடிய அடையாள அட்டையை, காண்பித்து இருப்பிடத்தில் இருந்து பயிலும்‌ பள்ளி வரை சென்றுவர, கட்டணமின்றிப் பயணிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

அதே போன்று, அரசு கல்லூரி, அரசு பல்தொழில்நுட்ப கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில்‌ பயிலும்‌ மாணவ / மாணவியர்கள்‌ தங்களது கல்வி நிறுவனத்தால்‌ வழங்கப்பட்ட புகைப்படத்துடன்‌ கூடிய அடையாள அட்டையை, நடத்துநர்களிடம்‌ காண்பித்து இருப்பிடத்தில் இருந்து பயிலும்‌ கல்வி நிறுவனம்‌ வரை சென்றுவர, கட்டணமின்றிப் பயணிக்க அனுமதி அளிக்கப்படுகிறது என்று அமைச்சர்‌ ராஜகண்ணப்பன்‌ தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க:

தமிழ்நாட்டில் மழை? வானிலை ஆய்வு மையம் !

தங்கம் வெள்ளி விலையில் சரிவு! முழு விவரம்!

English Summary: Good news for school and college students! Published on: 31 August 2021, 05:20 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.