1. செய்திகள்

தமிழகத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை! வானிலை நிலவரம்!!

Poonguzhali R
Poonguzhali R
Heavy rain in Tamil Nadu! Weather condition!!


தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், மயிலாடுத்துறை உள்ளிட்ட 26 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மேலும் இன்று முதல் 18 ஆம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

14.10.2022,15.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது‌.விழுப்புரம்‌, கடலூர்‌, மயிலாடுதுறை, நாகப்பட்டினம்‌, திருவாரூர்‌, தஞ்சாவூர்‌, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திருவண்ணாமலை, திருப்பத்தூர்‌, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்‌, முதலான மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌, புதுச்சேரி பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யலாம் எனக் கூறப்படுகிறது.

16.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது‌. கடலூர்‌, மயிலாடுதுறை,நாகப்பட்டினம்‌, திருவாரூர்‌, தஞ்சாவூர்‌, புதுக்கோட்டை, ராமநாதபுரம்‌, சிவகங்கை, விருதுநகர்‌, மதுரை, திண்டுக்கல்‌, திருச்சி, அரியலூர்‌, பெரம்பலூர்‌, கள்ளக்குறிச்சி, நாமக்கல்‌, கரூர்‌, திருப்பூர்‌, கோயம்புத்தூர்‌, நீலகிரி, தேனி முதலான‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

17.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யும் எனவும், நாகப்பட்டினம்‌,மயிலாடுதுறை, திருவாரூர்‌, தஞ்சாவூர்‌, புதுக்கோட்டை மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கன மழையும்‌, கடலூர்‌, அரியலார்‌, பெரம்பலூர்‌, சேலம்‌, கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, நாமக்கல்‌, திருச்சி, கரூர்‌, திண்டுக்கல்‌, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர்‌, தென்காசி, கன்னியாகுமரி மற்றும்‌ திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்யவாய்ப்புள்ளது.

18.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ பல இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யும்‌. கன்னியாகுமரி,திருநெல்வேலி மற்றும்‌ தென்காசி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கனமழையும்‌, தேனி, விருதுநகர்‌, மதுரை, திண்டுக்கல்‌, திருப்பூர்‌, கோவை‌, நீலகிரி, ஈரோடு, சேலம்‌, நாமக்கல்‌, கரூர்‌, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர்‌, திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, மயிலாடுதுறை, ராமநாதபுரம்‌, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யலாம் எனக் கூறப்படுகிறது.

சென்னை நகரைப் பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது‌. அதிகபட்சவெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌ எனக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க

தமிழகம்: 5ம் வகுப்பு கல்வி போதும், கிராம உதவியாளர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்

எச்சரிக்கை வேண்டும்: மின்சார கட்டணம் குறித்து முக்கிய அறிவிப்பு!

English Summary: Heavy rain in Tamil Nadu! Weather condition!! Published on: 14 October 2022, 03:35 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.