1. செய்திகள்

தமிழக அரசின் புதிய அறிவுப்பு: நவீன வசதிகளுடன் கூடிய தானிய கிடங்கு: வன ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு

KJ Staff
KJ Staff
Tamil Nadu Cm

தமிழக சட்ட பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் விவசாகிகளின் நலனுக்காக குளிர்பதன வசதி கொண்ட தானிய கிடங்கு, நவீன அரிசி ஆலை ஆகியன அமைக்க பட உள்ளது.     

முக்கிய அறிவிப்புகள்

  • தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் தினசரி 100 மெட்ரிக் டன் அரவைத் திறன் கொண்ட நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அரிசி ஆலை அமைக்க படும்.
  • எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு 36 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 28 தனியா கிடங்குகள் பல்வேறு இடங்களில் அமைக்க பட உள்ளன. ஏற்கனவே உள்ள பழைய தானிய கிடங்குகளில் தேவையான சீரமைப்புகளை செய்யும்.     
Storage
  • 113 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் உட்பட , 125 கூட்டுறவு நிறுவனங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டி தர படும்.
  • கன்னியா குமரி, அரியலூர், புதுக்கோட்டை, தேனி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் புதிய பண்டக சாலை அமைக்கபடும்.
  • தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்தில் சூரிய ஒளி மூலம் இயங்கும் குளிர்பதன சேமிப்புக் கிடங்கு  நிறுவபட உள்ளது. இதன் மூலம் காய்கறிகள், புளி, பழங்கள், பருப்பு வகைகள், பூக்கள் மற்றும் இதர விவசாய பொருட்களை பாதுகாப்பான முறையில் சேமித்து  வைத்து கொள்ளலாம்.      
  • புதிய முயற்சியாக ரேஷன் கடைகளில் தொடங்கப்பட்ட அம்மா கூட்டுறவு சிறு அங்காடி மேலும் விரிவு படுத்தப்படும்.
  • காஞ்சிபுரத்தில் உள்ள சிட்லபாக்கம் ஏரி சீரமைக்கப்பட்டு, உபரிநீர் வீணாவது தடுக்க படும்.
  • வனத்துறையிலும் சில அறிவிப்புகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன் படி  வனப்பாதுகாப்பு காவலர்களின் ஊதியம் உயர்த்தப்படும், மேலும் வன பகுதிகளில் உள்ள சாலைகளை மேம்படுத்துவதற்கான பணிகளை விரைவில் தொடங்கப்படும் என்றார்.  

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: In Tamil Nadu Assembly, CM Edapadi Palaniswamy Made An Announcement Under Rule No 110 Published on: 06 July 2019, 02:07 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.