1. செய்திகள்

காய்கறி சாகுபடிக்கு ஹெக்டேருக்கு ரூ.5000 வரை ஊக்கத்தொகை!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Incentives up to Rs. 5000 per hectare for vegetable cultivation - Call to farmers!

திருவண்ணாமலையில் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தோட்டக்கலைத் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து திருவண்ணாமலை தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் ரெ.பா.வளர்மதி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

  • குறைந்த நாள்களில் அதிக வருமானம் தரக்கூடிய பயிர்களாக காய்கறி பயிர்கள் உள்ளன.

  • விவசாயிகள் காய்கறி சாகுபடி செய்யத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தோட்டக்கலைத் துறை தயாராக உள்ளது.

  • இதற்காக, மிக குறைந்த நீர் ஆதாரம் கொண்ட இடங்களில் தேவையான நீர் ஆதாரத்தை ஏற்படுத்தவும், சொட்டு நீர்ப்பாசனம் அமைக்கவும் தோட்டக்கலைத் துறை சார்பில் ஒரு ஹெக்டேருக்கு ரூ.ஒரு லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.

  • மேலும் காய்கறிகள் பயிரிடுவதற்கான விதைகள் மானிய விலையில் வழங்கப்படுகிறது.

  • கத்தரி, மிளகாய், தக்காளி, பீர்க்கை வெண்டை, பாகற்காய், புடலை, வெள்ளரி, பூசணி, தர்பூசணி பரங்கிக்காய், சுரைக்காய் போன்ற காய்கறிகளை பயிரிடும் விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.2500 ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது

  • இயற்கை முறையில் நஞ்சு இல்லாத காய்கறி உற்பத்தி செய்திடும் விவசாயிகளுக்கு ஏற்றுமதி அடையாள சான்றும், ஒரு ஹெக் டேருக்கு ரூ.3700 முதல் ரூ.5000 வரை ஊக்கத் தொகையும் வழங்கப்படுகிறது.

  • எனவே, வரும் தை மாத பருவத்தில் காய்கறி நடவு செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

தமிழகத்தில் விவசாயத்திற்கான இலவச மின்வினியோக நேரம் மாற்றம்!

இருமடங்கு சாகுபடி தரும் திருந்திய நெல் சாகுபடி!

PMKSY:நுண்ணீர் பாசனத் திட்டத்தில் பயன்பெற அழைப்பு!

English Summary: Incentives up to Rs. 5000 per hectare for vegetable cultivation - Call to farmers! Published on: 06 November 2020, 06:28 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.