1. செய்திகள்

விவாசகிகள் மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை: கெய்ல் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தல்

KJ Staff
KJ Staff

குருவை சாகுபடி செய்த விவசாய நிலத்தில் கெய்ல் நிறுவனம் எரிவாயு குழாயினை பதித்து வருகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள் இதனை உடனடியாக தடுத்து நிறுத்தும் படி அப்பகுதி விவசாக்கிகள் மற்றும் பொது மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே குருவை சாகுபடி செய்த விவசாய நிலத்தில் குழாய் பதித்து இயற்கை எரிவாயு எடுத்து செல்ல திட்டமிட்டுள்ளது. இக்குழாய் பதிப்பு நான்கு மாவட்டங்கள்  வழியாக செல்ல உள்ளது. குழாய் எடுத்து செல்லும் பகுதிகளில் எல்லாம்  குருவை சாகுபடி நடந்து கொண்டு இருப்பதால் விவசாகிகள் எல்லாம் செய்வதறியாது உள்ளனர்.

பெரும்பாலான நிலங்களில் குருவை சாகுபடி தொடங்கி உள்ளன. சில நிலங்களில் குருவை சற்று வளர்ந்துள்ளன. ஒரு சில நிலங்களில் நடவு பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் கனரக வாகனங்களுடன் விளை நிலங்களில் நுழைத்து குழாய் பாதிக்கும் பணியினை செய்து வருகின்றனர், விளை நிலங்கள் எல்லாம் புகை முட்டமாக காட்சி அளிக்கிறது.

எதிர்ப்பு தெரிவிக்கும் விவாசகிகளை காவல் துறையினர் கைது செய்து , அச்சுறுத்தி வருகிறார்கள். விவசாயம் என்பது தமிழகத்தில் நலிந்து வரும் நிலையில் இது போன்ற திட்டங்கள் மேலும் பின்னடைவை தரும். குறைந்த அளவிலான மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

போதிய நீர் இல்லாமல் விளை நிலங்கள் எல்லாம் வீணாகி கொண்டிருக்கும் போது வெகு சிலரே  விவசாயதில் ஈடுபட்டு இருக்கின்றனர். அரசு அவர்களின் குறைகளை செவிமடுக்க வேண்டும். இத்திட்டத்தினை கை விட வேண்டுமென நாமும் கோரிக்கை வைப்போம். 

English Summary: Tamil Nadu Farmers Start Protest: GAIL Pipeline Project Has Began: Disturbing Kuruvai Cultivation Published on: 18 May 2019, 06:08 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.