1. செய்திகள்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்துக்கு ரூ.48,000 கோடி இழப்பு!

KJ Staff
KJ Staff
Tamil Nadu State Transport

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் 48 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருவதாக சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் கூறியுள்ளார்.

தமிழக சட்டப் பேரவையில் 2022-23ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் விவாதக் கூட்டத்தொடர் இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடரின் கேள்வி நேரத்தில், மதுரை மேற்கு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் கே.ராஜூ கேள்வி எழுப்பினார். அதில் மதுரை உள்ளிட்ட மாநகர் பகுதிகளில், குறிப்பிட்ட பேருந்துகளில் மட்டும்தான் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள் என்றும், இதனால் குறிப்பிட்ட நேரத்தில் பெண்கள் அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்ல முடிவதில்லை என்றும் கூறினார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், மகளிர் பேருந்து என்பது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவுத் திட்டம் என்றும், அந்தக் கனவுத் திட்டம் மிக வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்தார். திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி, மாநகரப் பேருந்துகளில் பெண்களுக்கு முதலில் 40 சதவீதம் என வைத்தோம் என்றும், ஆனால், தற்போது 61.82 சதவீதமாகக் கூடிவிட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம் திட்டத்திற்கு முன்பு ஆயிரத்து 380 கோடி ரூபாய் ஒதுக்கிய அரசு, இந்த முறை ஆயிரத்து 510 கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளதாக அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்தார். அனைத்துப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசமாக விட்டால், பிறகு எப்படி போக்குவரத்துக் கழகத்தை நடத்துவது? என்று பேசியவர், ஏற்கெனவே 48 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தில் போய்க்கொண்டிருப்பதாக அவர் பதிலளித்தார்.

மேலும், சென்னையிலிருந்து இந்த நாட்களில் பேருந்துகள் இயக்கப்படும் வழித்தடங்களிலும் துறை மாற்றங்களைத் தொடங்கியுள்ளது. ரெட் ஹில்ஸ் வழியாக ஆந்திராவுக்குச் செல்லும் பேருந்துகள் - TNSTC மற்றும் APSRTC சேவைகள் - மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். கிழக்கு கடற்கரை சாலை (ECR) வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரத்திற்கு இயக்கப்படும் பேருந்துகள் KK நகர் MTC ஸ்டாண்டிலிருந்து பயணத்தைத் தொடங்கும். திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம்-சானடோரியத்தில் உள்ள அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

திருத்தணி வழியாக காஞ்சிபுரம், ஆற்காடு, ஆரணி, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஓசூர், சித்தூர் மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும். தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையத்தில் திண்டிவனம், பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம் வழியாக திருவண்ணாமலைக்கு பேருந்துகளும், திண்டிவனம் வழியாக புதுச்சேரி, சிதம்பரம் மற்றும் கடலூர் செல்லும் பேருந்துகளும் இயக்கப்படும்.

மேலும் படிக்க..

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு பயிற்சி!

English Summary: Tamil Nadu State Transport Corporation loses Rs.48,000 Crore! Published on: 23 March 2022, 11:49 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.