1. கால்நடை

நாட்டுக்கோழி வளர்க்க ஆசையா? ரூ.75 ஆயிரம் மானியத்துடன் 5 நாள் பயிற்சி!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
5 days training with a grant of Rs. 75,000! Stunning opportunity!
Credit : Live 15 Daily

அரசு மானியம் பெற்று நாட்டுக்கோழி வளர்ப்புத் தொழில் ஈடுபட விரும்புவோருக்கு 5 நாள் பயிற்சி அளிக்கப்படும் என ஈரோடு மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

  • தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 2020-21ம் ஆண்டில் நாட்டுக்கோழி வளர்ப்பு மூலம் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

  • இத்திட்டத்தில் ஒரு ஊராட்சி ஒன்றியத்துக்கு அதிகபட்சமாக 3 பயனாளிகள் வீதம் முன் அனுபவம் அல்லது ஆர்வம் உடைய 35 விவசாயிகள் முதற்கட்டமாகத் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

  • தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு 50 சதவீத மானியமாக கோழிக்குஞ்சுகள் கொள்முதலுக்கு ரூ.15,000, தீவனம் கொள்முதலுக்கு ரூ.22,500, அடைகாக்கும் கருவி கொள் முதலுக்காக அதிகபட்சமாக ரூ.37,500 என மொத்தம் என ரூ.75,000 வழங்கப்படும்.

நிபந்தனைகள் (Conditions)

  • இத்திட்டத்தில் கிராம ஊராட்சியில் நிரந்தரமாக குடியிருப்போர் மட்டுமே தேர்வு செய்யப்படுவர்.

  • மேலும், ஆயிரம் கோழிகள் வளர்க்கக் கூடிய 2.500 சதுர அடி பரப்பளவு கொண்ட பண்ணைக் கொட்டகை அமைப்பு சொந்தமாக வைத்திருக்க வேண்டும்.

  • கோழி வளர்ப்புக்குத் தேவையான தீவனத் தட்டுகள், தண்ணீர்த் தட்டுகளை பயனாளியே கொள்முதல் செய்ய வேண்டும்.

Credit : Vikatan

முன்னுரிமை (Priority)

  • விதவைகள், கணவனால் கைவிடப்பட்டோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

  • 30 சதவீத பயனாளிகளாக ஆதி திராவிடர், பழங்குடியினர் தேர்வு செய்யப்படுவார்கள்.

  • பயனாளிகள் ஏற்கெனவே தமிழக அரசின் விலையில்லா கோழிகள் வழங்கும் திட்டம், கோழிப் பண்ணை அமைக்கும் திட்டம் ஆகியவற்றில் பயனடையாதவர்களாக இருக்க வேண்டும்.

  • தேர்வு செய்யப்படும் பயனாளிகள் 3 ஆண்டுகளுக்கு குறையாமல் பண்ணையைப் பராமரிக்க உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

பயிற்சி (Training)

  • முதல்கட்டமாக 3 நாள்கள் அடிப்படை கோழி வளர்ப்பு, தீவன மேலாண்மை, தடுப்பூசி போடுதல் போன்ற பயிற்சிகளும், அடைகாக்கும் கருவி கொள்முதல் செய்யப்படும் போது 2 நாள்கள் குஞ்சு பொறிப்பு குறித்தும் பயிற்சி அளிக்கப்படும்.

  • தகுதியான, ஆர்வமுள்ள விவசாயிகள் அருகிலுள்ள கால் நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் படிக்க...

எப்போது மின்னல் தாக்கும்?- தெரிந்துகொள்ள Damini-App

இவர்கள் மரவள்ளிக்கிழங்கை சாப்பிடக்கூடாது - ஏன் தெரியுமா?

English Summary: 5 days training with a grant of Rs. 75,000! Stunning opportunity! Published on: 19 November 2020, 11:52 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.