
Prepare super snacks for the rain from the cup semolina aval!
தென்மேற்கு பருவமழை தொடங்கி மழைக்கு வெலுத்து வாங்கிக்கொண்டியிருக்கிறது. இந்நேரத்தில் அசத்தலான ஒரு ஸ்னாக்ஸ் மழையை ரசித்துக்கொண்டு, ஜன்னல் ஓரமோ அல்லது பால்கனியிலோ உட்கார்ந்தால், என்ன சுகமாக இருக்கும். தமிழகத்தில் கடந்த 1 மணி நேரத்திற்குள் 10 மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
அந்த வகையில் கப் அளவு, ரவை மற்றும் அவல் வைத்து, சூப்பரான ஒரு ஸ்னாக்ஸ் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
ரவை | 1 கப் |
அவில் | 1 கப் |
தண்ணீர் | தேவைக்கேற்ப |
துருவிய பூண்டு | 2/4 பல் |
எண்ணெய் | தேவைக்கேற்ப |
கடுகு | தேவைக்கேற்ப |
சீரகம் | தேவைக்கேற்ப |
உளுத்தம் பருப்பு | தேவைக்கேற்ப |
உளுத்தம் பருப்பு | தேவைக்கேற்ப |
செய்முறை:
- கப் அளவு அவல் எடுத்து, அதே அளவு தண்ணீரில் உரவைக்கவும்.
- உரிய அவலை நன்றாக பிசைந்துக்கொள்ளவும்.
- அதன் பின்னர் அத்துடன் கப் அளவு ரவையை சேர்த்துக்கொள்ளவும். பின்பு உருண்டை பிடிக்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.
- பின்னர் சிறிது நேரம் கழித்து, அதில் சீரகம், உப்பு மற்றும் துருவிய பூண்டு சேர்த்து உருண்டை பிடித்துக்கொள்ளவும்.
- பின்னர், இந்த உருண்டைகளை இட்லி சட்டியின் உதவியுடன் அவித்து எடுத்துக்கொள்ளவும்.
- அதன் பின் ஒரு வானலியில், சிறிது எண்ணெய் சேர்த்து, அத்துடன் கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை சேர்க்கவும்.
- சேர்த்த அனைத்தும் பொன்னிறம் வந்தவுடன், அவித்து வைத்திருக்கும் உருண்டைகளை, இதில் சேர்த்து, தேவைக்கேற்ப இட்லி பொடியை துவி விட்டு பரிமாறவும்.
சாஃப்டானா, ஹெல்தியான, ஃப்ளஃபியான மற்றும் டேஸ்டியானா அவல் உருண்டைகள் தயார். இதை சிற்றுண்டியாகவும் எடுத்துக்கொள்ளலாம்.
மேலும் படிக்க:
தமிழகம்: 10 மாவட்டங்களில் கொட்டும் மழை! வானிலை நிலவரம் என்ன?
தமிழகம் உட்பட 24 மாநிலங்களில் பெட்ரோல் டீசல் கொள்முதல் நிறுத்தம்...
Share your comments