1. செய்திகள்

86 குடியிருப்புதாரர்களுக்குக் கருணைத் தொகை: மு.க ஸ்டாலின்

Poonguzhali R
Poonguzhali R
M.K. Stalin

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கொளத்தூர் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட ராஜா தோட்டம் திட்டப்பகுதியில் 1974-75 ஆம் ஆண்டு 280 சதுர அடியில் கட்டப்பட்ட 84 அடுக்குமாடி குடியிருப்புகள் பழுதடைந்த நிலையில் இருந்தன. இந்நிலையில் அங்கு உள்ள 86 குடியிருப்புதாரர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கருணைத் தொகையினை வழங்கியுள்ளார். இது குறித்த விரிவான தகவலை இப்பதிவு வழங்குகிறது.

வாரியத்தின் கட்டட வல்லுனர் குழு ஆய்வு செய்து பழுதடைந்த குடியிருப்புகளை இடித்து விட்டு மறுகட்டுமானம் செய்ய பரிந்துரை செய்து இருக்கிறது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் மறு குடியமர்வு செய்யவுள்ள குடியிருப்புதாரர்களுக்கு வழங்கப்படும் கருணைத் தொகையினை ரூ.8 ஆயிரத்தில் இருந்து ரூ.24 ஆயிரமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர்த்தி வழங்க உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, ராஜா தோட்டம் திட்டப்பகுதியில் மறு குடியமர்வு செய்யவுள்ள 84 குடியிருப்புதாரர்களுக்குக் கருணைத் தொகையாகத் தலா ரூ.24 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.20.16 லட்சத்திற்கான காசோலைகளையும், தற்காலிக ஒதுக்கீட்டு ஆணைகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குடியிருப்புதார்களுக்கு வழங்கினார்.

இத்திட்டம் செயல்பட இருக்கும் பகுதியில் உள்ள பழுதடைந்த 84 பழைய குடியிருப்புகளை இடித்துவிட்டு அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் புதிதாக 400 சதுர அடியில், தூண்தளம் மற்றும் 9 அடுக்குமாடிகளுடன் 162 குடியிருப்புகள் ரூ.24.30 கோடி செலவில் கட்டப்பட உள்ளது.

ஒவ்வொரு குடியிருப்பும் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் எனக் கூறப்பட்டது. இதில் ரூ.7 லட்சம் மாநில அரசு மானியம், ரூ.6.09 லட்சம் மாநில அரசின் உட்கட்டமைப்பு நிதி, ரூ.1.50 லட்சம் ஒன்றிய அரசு மானியம் ஆகியன வழங்கப்பட இருக்கின்றன. மேலும், இத்திட்டத்தின் கீழ்ப் பயன்பெறும் பயனாளிகளின் பங்களிப்பு தொகையாக 20 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.250 அல்லது ஒரே தவணையாக ரூ.41 ஆயிரம் செலுத்தும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குடியிருப்பும் ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையலறை, குளியலறை மற்றும் கழிப்பறை ஆகிய வசதிகளுடன், 400 சதுர அடியில் கட்டப்படும் எனக் கூறப்படுகிறது. அதோடு, ஒவ்வொரு வீட்டிற்கும் 300 லிட்டர் கொள்ளளவு கான்கிரீட் நீர்தேக்க தொட்டிகள் அமைக்கப்படும். மேலும், 2 மின் தூக்கிகள், மின் ஆக்கிகள், தெரு விளக்குகள் மற்றும் மழைநீர் சேகரிப்பு தொட்டிகளும் அமைக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க

தமிழகத்தில் 5 சுகாதார மையங்களுக்கு தேசியத் தர உறுதி சான்று!

”நான் முதல்வன்” திறன் மேம்பாட்டுத் திட்டம்: தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்

English Summary: Gratuity Money for 86 residents: M.K. Stalin Published on: 30 August 2022, 03:41 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.