1. செய்திகள்

போராட்டத்தில் தோட்டக்கலை ஊழியர்கள்- கிடப்பில் போடப்பட்ட மலர் கண்காட்சி வேலைகள்

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Due to Botanical Garden workers strike arrangement of flowering plants are affected

அரசு தாவரவியல் பூங்காவில் (Government Botanical Garden -GBG) தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் இதர தொழிலாளர்கள் வேலைகளை முறைப்படுத்துதல் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமையான நேற்று 19-வது நாளாகப் போராட்டம் நடத்தினர்.

மாநில அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சிபிஎம் மற்றும் படுகதேச கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு தங்கள் ஆதரவை வழங்கியுள்ளன.

மே 19 ஆம் தேதி வருடாந்திர மலர் கண்காட்சி தொடங்க உள்ள நிலையில் வேலைநிறுத்தம் காரணமாக செடிகளுக்கு கத்தரித்து, நீர்ப்பாசனம் மற்றும் பராமரிப்பு, பூச்செடிகளின் ஏற்பாடு ஆகிய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. காய்ந்த செடிகளும் அகற்றப்படவில்லை. ஊட்டியில் உள்ள ரோஸ் கார்டன், குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்கா போன்ற பிரபலமான சுற்றுலா தலங்களிலும் பராமரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்ட தோட்டக்கலை தொழிலாளிகள் முன்னேற்ற சங்க தலைவர் ரமேஷ்குமார் கூறுகையில், “மாநில அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலக உதவியாளர் மற்றும் மஸ்தூர்களுக்கு இணையான அரசு சம்பளத்தை வழங்க வேண்டும். தற்போதுள்ள ரூ.11,773 சம்பளத்தில் இருந்து ரூ.3,000 உயர்த்த வேண்டும் என்று கேட்கிறோம். மாநில அரசு எங்களை பணி நிரந்தரம் செய்தாலும், பிஎப், இன்சூரன்ஸ் போன்ற சலுகைகள் கிடைக்கவில்லை. விவசாயத் தொழிலாளர்களை தமிழ்நாடு தோட்டக்கலை மேம்பாட்டு முகமையின் (TANHODA) ஒருங்கிணைந்த ஊதியத்திலிருந்து அரசு ஊழியர்களாக மாற்ற வேண்டும் எனத் தெரிவித்தார்.

கோரிக்கை நிறைவேறினால் மாவட்டம் முழுவதும் உள்ள 1,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் கோயம்புத்தூரில் உள்ள கல்லாறு பண்ணையில் உள்ள தொழிலாளர்கள் பயனடைவார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக கூலி உயர்த்தப்படவில்லை. 300 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நாள் ஒன்றுக்கு ரூ.425 பெறுகின்றனர், அதை ரூ.720 ஆக உயர்த்த வேண்டும்,'' என்றார்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள படுகதேச கட்சியின் தலைவர் மஞ்சை.வி.மோகன் தெரிவிக்கையில், சுற்றுலாத்துறை அமைச்சர் கே.ராமச்சந்திரன், போராட்டக்காரர்களுடன் சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தை வாபஸ் பெறுமாறு கேட்டுக் கொண்டார். எனினும் அமைச்சர் எந்த உறுதிமொழியும் வழங்காத நிலையில் தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

தோட்டக்கலைத் துறை உயர் அதிகாரியை தொடர்பு கொண்டபோது, தொழிலாளர்களின் கோரிக்கைகள் தோட்டக்கலை மேலாண்மை இயக்குனருக்கு அனுப்பப்பட்டு, வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.  ஊதியம் வழங்குவது கொள்கை முடிவு என்பதால் அரசு கோரிக்கைகளை பரிசீலித்து வருகிறது. எவ்வாறாயினும், இதற்கு உடனடியாக தீர்வு காணுமாறு தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து போராட்டம் தொடர்கிறது.

மலர் கண்காட்சியின் ஒரு பகுதியாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கான போராட்டத்தை வாபஸ் பெறுமாறு நாங்கள் தொழிலாளர்களை சமாதானப்படுத்துகிறோம், ” என்று அதிகாரி கூறினார்.

மேலும் காண்க:

சோயாமீலுக்கு அடிச்ச லக்- போட்டி போட்டு கொள்முதல் செய்யும் அண்டை நாடுகள்

English Summary: Due to Botanical Garden workers strike arrangement of flowering plants are affected Published on: 11 April 2023, 05:45 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.