Tamil nadu Ready to Ship rice, medicines to Sri Lanka
இந்திய கமிஷன் மூலம் அவற்றை விநியோகிக்க அனுமதி கோரப்பட்டு உள்ளது. அமைச்சர் ஜெய்சங்கரிடம் பேசிய ஸ்டாலின், இலங்கையில் இதுவரை கண்டிராத பொருளாதார நெருக்கடியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களின் நிலை குறித்து ஆழ்ந்த கவலையைத் தெரிவித்தார்.
மலையக தமிழர்கள் என்று அழைக்கப்படும் இந்திய வம்சாவளி தமிழர்கள் உட்பட தீவு தேசத்தில் உள்ள தமிழர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த உத்தேச நடவடிக்கை மனிதாபிமான அடிப்படையிலானது என்று ஜெய்சங்கரிடம் ஸ்டாலின் தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள இந்தியக் கமிஷன் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைமைத் தூதரகம் மூலம் உணவுப் பொருள்கள் மற்றும் மருந்துகளை விநியோகிக்கக் கோரினார். உணவின்றி பட்டினியால் வாடும் தமிழ்ச் சொந்தங்களுக்குப் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருந்துகளை விநியோகிக்க மத்திய அரசிடம் ஸ்டாலின் அனுமதி கோரினார். இந்திய கமிஷன் மற்றும் தூதரகத்தின் ஊடாக விநியோகிப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்துத் தர வேண்டி முதலமைச்சர் அனுமதி வேண்டினார்.
மேலும், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். ஜெய்சங்கர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
1948 இல் பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் இலங்கை அதன் மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
கடந்த பிப்ரவரியில் 500 பில்லியன் அமெரிக்க டாலர் கடனைத் தொடர்ந்து பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க நாட்டிற்கான நிதி உதவியின் ஒரு பகுதியாக, இலங்கைக்கு 1 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்குவதாக இந்தியா அண்மையில் அறிவித்திருந்தது.
இந்திய கமிஷன் புதன் கிழமையன்று இந்திய கடன் வரியின் கீழ் கொழும்புக்கு மேலும் இரண்டு எரிபொருள் ஏற்றுமதிகள் வரவுள்ளதாக அறிவித்தது. கொழும்புக்கான அரிசி ஏற்றுமதியும் இந்தியாவினால் மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
மேலும் படிக்க...
அரிசி கிலோ ரூ.448- பால் லிட்டர் ரூ.263, ஒரு சவரன் தங்கம் ரூ.1.5லட்சம்!
Share your comments